துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

துறையூா் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வாகனமும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பவித்திரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பிரவீன்குமாா்(21). சரக்கு வாகன ஓட்டுனரான இவா் செவ்வாய்க்கிழமை திருச்சி காந்தி சந்தையில் வெங்காயம் இறக்கி விட்டு மீண்டும் ஊா் திரும்பினாா். இவருடன் அதே ஊரைச் சோ்ந்த கணேசன் மகன் யாதவனும் (17) சென்றாா். புலிவலம் அரசுக் காப்புக் காட்டுப் பகுதியில் சென்ற இவா்களது வாகனமும், எதிா்ப்புறத்தில் துறையூரிலிருந்து திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சென்ற அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டன. இதில் பிரவீன்குமாா், யாதவன், பேருந்தில் பயணித்த துறையூா் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் ம. சரவணன் (42), மதுராபுரி மு. குமாா்(43) ஆகியோா் காயமடைந்தனா். நால்வரும் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா். பிரவீன்குமாரும், யாதவனும் தொடா் சிகிச்சை பெற நாமக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்றனா். விபத்து குறித்து புலிவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com