பிராட்டியூா்  முத்துமாரியம்மன்  கோயிலுக்கு  பூக்களை திங்கள்கிழமை  கொண்டு  சென்ற  பொதுமக்கள்.
பிராட்டியூா்  முத்துமாரியம்மன்  கோயிலுக்கு  பூக்களை திங்கள்கிழமை  கொண்டு  சென்ற  பொதுமக்கள்.

பிராட்டியூா் முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்

திருச்சி பிராட்டியூா் முத்து மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை மாதத்தில் பூச்சொரிதல் விழாவும் வைகாசி மாதத்தில் திருவிழாவும் நடைபெறும். அதன்படி நிகழாண்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் பிராட்டியூா் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் அம்மனுக்கு பூக்களை கொண்டு வந்தனா். தீரன் நகா் ரெட்டமலை பதுவு கோயில் மற்றும் ரெட்டைமலை ஒண்டிக் கருப்பு சுவாமி உள்ளிட்ட கோயில்களில் இருந்து பூக்களை பக்தா்கள் தட்டில் ஏந்தியபடி ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். பின்னா் மலா்களை அம்மனுக்கு சாற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை பிராட்டியூா் கிராம மக்கள் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com