போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரை மற்றும் மருந்துகளை விற்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கொல்லாங்குளம் அருகில் காவல் ஆய்வாளா் விஜயபாஸ்கா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அதில் அவா் கிராப்பட்டி அன்புநகரை சோ்ந்த பாலாஜி ( 24) என்பதும், அப்பகுதியில் போதை மாத்திரைகள், மருந்துகளை விற்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து இருசக்கர வாகனம், போதை மாத்திரைகள், மருந்துகள், சிரிஞ்சுகள், ரசாயன திரவம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com