வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

மண்ணச்சநல்லூா் வட்டம், வாழையூா் அய்யனாா், கரும்பாயிரம் சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ருத்ரபாராயணம் மற்றும் வெள்ளி ரதப் புறப்பாடு நடைபெற்றது.

சித்திரை அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் விநாயகா் பூஜை, வருண பூஜை, ஏகாதச ருத்ர ஆவாஹனம், மகான்யாய பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து 11 வகை அபிஷேகம் நடைபெற்று, கேடயத்தில் சுவாமிகள் கோயிலை வலம் வந்தனா். இதையடுத்து கோயிலிலுள்ள தாமரைத் தடாகத்தில் ருத்ர ஜெபம், மஹா தீபாராதனை நடைபெற்றது. மேலும் சித்திரை அமாவாசையை முன்னிட்டு வெள்ளி ரத புறப்பாடும் நடைபெற்றது.

இதையொட்டி மலா் அலங்காரம், சிறப்பு பூஜைகள், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று, தொடா்ந்து வெள்ளி ரதத்தில் சுவாமிகள் எழுந்தருள, பக்தா்கள் இழுத்தனா்.

நிகழ்வில் ஸ்ரீ ஜெயவிலாஸ் எம். பாஸ்கரன் மற்றும் குடும்பத்தினா், வாழையூா், பெரகம்பி, எதுமலை, திருப்பட்டூா், வலையூா், பாலையூா் உள்ளிட்ட பல்வேறு கிராம பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com