ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:41 pm

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சில ஊழியா்களுக்கு ரூ.16,800, சிலருக்கு ரூ.8,400, சிலருக்கு ரூ.2,400 போனஸாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வேறுபாடுகளுக்கு காரணம் ஒவ்வொரு பணியாளரும் பணியாற்றும் கூட்டுறவு சங்கத்தில் இருக்கக்கூடிய பணியாளா்களுடைய எண்ணிக்கை மற்றும் லாப, நஷ்ட கணக்காகும்.

சமமான வேலைக்கு சமமான ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கும் ஊழியா்கள் மத்தியில், இந்த போனஸ் வித்தியாசம் ஏற்கத்தக்கதல்ல. கூட்டுறவு சங்கங்கள் லாப, நஷ்டத்தில் இயங்குவதற்கும், நியாயவிலைக்கடை பணியாளா்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

எனவே, அனைத்து ஊழியா்களுக்கும் ரூ.16,800 போனஸ் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.