பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

'புகழ் பெற்ற ஏழைகள்': இரண்டே வரிகளில் வாழ்க்கைத் தத்துவம்! -பி.வி.கிரி

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முன்னேறி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்த ஏழைகளின் வெற்றியை விவரிக்கும் நூல்தான் ’புகழ் பெற்ற ஏழைகள்’ என்ற ஆங்கில நூல்.

News image

பி.வி. கிரி

Updated On :5 ஏப்ரல் 2021, 7:00 am IST

அந்தச் சிறுவனுக்குக் காலுக்குச் செருப்பில்லை; உடுத்திக் கொள்ள நல்ல ஆடையும் இல்லை. மான் தோலால் ஆன அரை நிஜாரை அணிந்திருந்தான். வறுமையால் உழன்ற அந்த சிறுவனுக்கு ’வாஷிங்டனின் வாழ்க்கை’ என்ற பழைய நூல் படிக்கக் கிடைத்தது. ஒருநாள் பெய்த மழையில் அவனது ஓட்டை மர வீடு ஒழுகி அந்தப் புத்தகம் நானைந்துவிட்டது. அதன் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு இருபத்தைந்து சதவீதம் மூன்று நாள்கள் கூலி வேலை செய்து அந்தப் புத்தகத்தின் மதிப்பைச் செலுத்தி அதைத் தனதாக்கிக் கொண்டான். உடுத்த கால்சட்டை இல்லாத நிலையில் அதை வாங்க நானூறு மரக்கட்டைகளை உடைத்து அந்தக் கூலியின் கால் சட்டை வாங்கினான். அவன் யார்? அவன் தான் பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன்.

சிறுவயதில் தெருவில் பத்திரிகைகளையும் ரயிலில் புத்தகங்களையும் விற்ற தாமஸ் ஆல்வா எடிசன் பின்னாளில் புகழ் பெற்ற விஞ்ஞானியானார்.

இப்படி ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முன்னேறி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்த ஏழைகளின் வெற்றியை விவரிக்கும் நூல்தான் ’புகழ் பெற்ற ஏழைகள்’ என்ற ஆங்கில நூல். இதை எழுதியவர் சாரா கே.போல்டன். தமிழில் இந்த நூலை குண்டூசி கோபால் மொழிபெயர்த்துள்ளார். மும்பையிலிருந்து பெர்ல் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் 1960-ல் 236 பக்கங்களில் வெளியிட்ட இந்த நூலின் அப்போதைய விலை 75 காசுகளே.

வறுமையில் உழன்று கால வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய பதினேழு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெஞ்சமின் பிராங்கிளின், மைக்கேல் பாரடே, கரிபால்டி, சார்லஸ் சிக்கென்ஸ். ஹென்றி ரூதர் போர்டு முதலிய

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.