ஒவ்வொரு மாவட்டத்திலும், அதன் சிறப்புக்கு ஏற்ப ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கான பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் ஏற்படுத்தப்படும்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவுப்பூங்கா அமைக்கப்படும்.
திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் புதிய குளங்களை ஏற்படுத்துதல், நீர் நிலைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பாசன வசதிகளுக்கு ரூ.655 கோடி ஒதுக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.