காப்பீட்டு நிறுவனங்களின் மூலதன தேவை விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் உறுப்பினர் நிலேஸ் ஷதி வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களுக்கான மூலதன தேவை தற்போது ரூ.100 கோடியாக உள்ளது. பல முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகமானதாக காணப்படுகிறது. எனவே, மூலதன தேவை விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் பயனாக, வரும் 2021 அல்லது 2022-ஆம் ஆண்டுக்குள் மூலதன தேவை தொகையில் மாற்றம் ஏற்படும். அப்போது, காப்பீட்டு துறையில் தடம்பதிக்க விரும்பும் பல நிறுவனங்கள் புதிதாக களமிறங்கும் என்றார் அவர்.