இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மந்த நிலையே காணப்பட்டது.
சர்வதேச சந்தை நிலவரங்களின் தொடக்கம் சாதகமாக இருந்தபோதிலும், முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, எரிசக்தி மற்றும் நிதி துறை சார்ந்த பங்குகளை லாப நோக்கு கருதி விற்பனை செய்தனர். ரூபாய் மதிப்பு சரிவும் பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 181 புள்ளிகள் சரிந்து 34,134 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 58 புள்ளிகள் குறைந்து 10,245 புள்ளிகளில் நிலைத்தது.