ஆக்ஸிஸ் வங்கி நிர்வாக இயக்குநராக அமிதாப் சௌத்ரி நியமனம்

ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு அமிதாப் சௌத்ரியை (54)  நியமனம் செய்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கி நிர்வாக இயக்குநராக அமிதாப் சௌத்ரி நியமனம்

ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு அமிதாப் சௌத்ரியை (54)  நியமனம் செய்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து ஆக்ஸிஸ் வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அமிதாப் சௌத்திரியை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அளித்த ஒப்புதலின் பேரில் இந்த முடிவை இயக்குநர்கள் குழு எடுத்தது. அமிதாப் சௌத்ரி வரும் 2019 ஜனவரி 1-ஆம் தேதி பொறுப்பேற்று 2021 டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் மூன்றாண்டுகளுக்கு அப்பதவியில் நீடிப்பார் என்று ஆக்ஸிஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 ஆக்ஸிஸ் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநராக உள்ள ஷிகா ஷர்மாவின் பதவிக்காலம் நடப்பாண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அமிதாப் அப்பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com