அந்நியச் செலாவணி கையிருப்பு 12 கோடி டாலர் சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12 கோடி டாலர் (ரூ.850 கோடி) சரிந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 12 கோடி டாலர் சரிவு


இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12 கோடி டாலர் (ரூ.850 கோடி) சரிந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 12 கோடி டாலர் குறைந்து 39,301 கோடி டாலராக (ரூ.27.51 லட்சம் கோடி) ஆனது. இதற்கு, செலாவணி சொத்து மதிப்பு பெருமளவு குறைந்து போனதே முக்கிய காரணம்.
இதற்கு முந்தைய வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பு 105 கோடி டாலர் அதிகரித்து 39,313 கோடி டாலராக காணப்பட்டது.
நவ.9-இல் முடிவடைந்த வாரத்தில் ஒட்டு மொத்த கையிருப்பில் பெரும் பங்களிப்பைக் கொண்டிருந்த அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 10 கோடி டாலர் சரிந்து 36,36,803 கோடி டாலரானது.
முன்னதாக மிகவும் அதிகரித்து காணப்பட்ட தங்கத்தின் கையிருப்பு கணக்கீட்டு வாரத்தில் 2,088 கோடி டாலர் என்ற நிலையான அளவில் இருந்தது. 
சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள கையிருப்பு 1.16 கோடி டாலர் சரிந்து 263 கோடி டாலராகவும், எஸ்டிஆர் மதிப்பு 64 லட்சம் டாலர் சரிந்து 146 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்நியச் செலாவணி கையிருப்பானது நடப்பாண்டு ஏப்ரல் 13-இல் தான் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. ஆனால், அதிலிருந்து தற்போது வரை செலாவணி கையிருப்பு 3,100 கோடி டாலர் (ரூ.217 லட்சம் கோடி) வரை சரிவைக் கண்டுள்ளது. ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி
அதிகளவிலான டாலரை செலவு செய்ததே இதற்கு முக்கிய காரணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com