ஆக.19-இல் மின்னணு நிறுவன தலைவர்கள்- மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சந்திப்பு

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மின்னணு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை வரும் திங்கள்கிழமை (ஆக.19) சந்தித்துப் பேசவுள்ளார்.
ஆக.19-இல் மின்னணு நிறுவன தலைவர்கள்- மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சந்திப்பு


மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மின்னணு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை வரும் திங்கள்கிழமை (ஆக.19) சந்தித்துப் பேசவுள்ளார்.
 ஆப்பிள், சாம்சங், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான், டெல், எரிக்ஸன், இன்டெல் உள்ளிட்ட பல மின்னணு தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 50 நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. மின்னணு தொழில்நுட்பத் துறை வளர்ச்சியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மேலும் அந்த துறை சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.
நிறுவனங்களைத் தவிர,  நுகர்வோர் மின்னணு மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (சிஇஏஎம்ஏ), இந்திய மின்னணு தொழில் கூட்டமைப்பு (இஎல்சிஐஎன்ஏ), இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக் சங்கம் (ஐசிஇஏ) உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய அமைச்சருடனான கூட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com