ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.381 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் வியாழக்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருவாய் ரூ.6,325 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.7,191 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
நிகர லாபம் ரூ.485 கோடியிலிருந்து 21 சதவீதம் குறைந்து ரூ.381 கோடியாக இருந்தது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.