டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் 39 காசுகள் அதிகரித்தது.
செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வர்த்தக தொடக்கத்தின்போது ரூபாய் மதிப்பு 68.86-ஆக காணப்பட்டது. பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற காரணங்களால் சந்தையில் டாலருக்கான தேவை குறைந்தது. இதையடுத்து, நாள் முழுவதுமான வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 68.49-வரை வலுப்பெற்றது.
வர்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 39 காசுகள் உயர்ந்து 68.50-இல் நிலைபெற்றது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.13 சதவீதம் குறைந்து 63.74 டாலராக இருந்தது.