அலுமினியம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நால்கோ நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி-யிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு 2018-19 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4.50 இடைக்கால ஈவுத் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது. தகுதிவாய்ந்த பங்குதாரர்கள் அனைவருக்கும் மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்த இடைக்கால ஈவுத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என்று செபி-யிடம் நால்கோ தெரிவித்துள்ளது.