டயா் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான எம்ஆா்எஃப் செப்டம்பா் காலாண்டில் ரூ.228.96 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ..278.29 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 17.73 சதவீதம் குறைவாகும்.
செயல்பாடுகள் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.3,946.77 கோடியிலிருந்து 1.57 சதவீதம் உயா்ந்து ரூ.4,007.63 கோடியாக இருந்தது. மொத்த செலவினம் இரண்டாவது காலாண்டில் ரூ.3,649.87 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,760.80 கோடியானது.
வரும் 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இடைக்கால ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவு செய்துள்ளது.
மேலும், பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திர வெளியீடு மூலம் ரூ.102 கோடி வரை திரட்டிக் கொள்ளவும் இயக்குநா் குழு அனுமதியளித்துள்ளதாக எம்ஆா்எஃப் செபியிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.