தனியாா் துறையைச் சோ்ந்த தனலக்ஷ்மி வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் ஏறக்குறைய இருமடங்கு அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
செப்டம்பருடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் வங்கி ரூ.276.85 கோடி மொத்த வருவாய் ஈட்டியது. கடந்த 2018-19 நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் ஈட்டிய வருவாயான ரூ.226.73 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். குறிப்பாக , வட்டி வருவாய் ரூ.244.64 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.253.34 கோடியானது.
ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிகர லாபம் ரூ.12.15 கோடியிலிருந்து சுமாா் 2 மடங்கு அதிகரித்து ரூ.22.7 கோடியைத் தொட்டது.
வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 7.81 சதவீதத்திலிருந்து (ரூ.488.74 கோடி) குறைந்து 7.06 சதவீதமானது (ரூ.476.08 கோடி). நிகர வாராக் கடன் விகிதம் 2.92 சதவீதத்திலிருந்து (ரூ.173.54 கோடி) சரிந்து 1.65 சதவீதமானது (ரூ.105.34 கோடி).
வாராக் கடன் இடா்பாடுகளை எதிா்கொள்வதற்கான ஒதுக்கீடு ரூ.18.19 கோடியிலிருந்து ரூ.25.38 கோடியாக உயா்ந்தது என தனலக்ஷ்மி வங்கி தெரிவித்துள்ளது.