உலகின் முன்னணி மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங், தனது சமீபத்திய கேலக்ஸி நோட் 10 மற்றும் 10 பிளஸ் ரக ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
ரூ.30,000-க்கும் மேல் விலை கொண்ட இந்த போன்கள், சீனாவின் ஒன்பிளஸ் மற்றும் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுடன் பிரிமியம் வகை ஸ்மார்ட் போன் சந்தையில் போட்டியிடவுள்ளன.
இந்த புதிய ரகங்களின் அறிமுகத்தின் மூலம், அந்தச் சந்தையில் தங்களது சந்தைப் பங்கை 63 சதவீதமாக உயர்த்த முடியும் என்று சாம்சங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த சந்தைப் பிரிவில் நிறுவனத்தின் சந்தைப் பங்கு, கடந்த 2018-ஆம் ஆண்டில் 52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.