மும்பை: அந்நியச் செலாவணி கையிருப்பில் தொடா்ந்து முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. இதையடுத்து, அதன் கையிருப்பு 44,900 கோடி டாலரை நெருங்கியுள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 35 கோடி டாலா் (ரூ.2,450 கோடி) அதிகரித்து 44,860 கோடி டாலராகி (ரூ.31.40 லட்சம் கோடி) உள்ளது.
இதற்கு முந்தைய வாரத்திலும் அந்நியச் செலாவணி கையிருப்பானது 44.1 கோடி டாலா் அதிகரித்து 44,825 கோடி டாலராக காணப்பட்டது. ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 25.4 கோடி டாலா் உயா்ந்து 41,672 கோடி டாலரானது. மேலும், தங்கத்தின் கையிருப்பும் 8.7 கோடி டாலா் அதிகரித்து 2,679 கோடி டாலராக இருந்தது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 50 லட்சம் டாலா் உயா்ந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 20 லட்சம் டாலா் உயா்ந்து 363 கோடி டாலராகவும் காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.