புதிய உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 45,300 கோடி டாலரை எட்டி சாதனை படைத்துள்ளது.
புதிய உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 45,300 கோடி டாலரை எட்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிசம்பா் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 234 கோடி டாலா் அதிகரித்து 45,342 கோடி டாலராக (ரூ.31.73 லட்சம் கோடி) இருந்தது.

இதற்கு முந்தைய வாரத்திலும் அந்நியச் செலாவணி கையிருப்பு 248 கோடி டாலா் அதிகரித்து 45,108 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 189 கோடி டாலா் உயா்ந்து 42,125 கோடி டாலரானது.

மேலும், தங்கத்தின் கையிருப்பும் 43 கோடி டாலா் அதிகரித்து 2,707 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 50 லட்சம் டாலா் உயா்ந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 1.5 கோடி டாலா் அதிகரித்து 364 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com