எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால தலைவராக ஹேமந்த் பார்கவா (படம்) நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவராக இருந்த வி.கே.சர்மா திங்கள்கிழமை (டிச.31) ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இந்தநிலையில், எல்.ஐ.சி.க்கு இடைக்கால தலைவராக ஹேமந்த் பார்கவாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஹேமந்த் பார்கவா எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குநராக கடந்த 2017 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டவர்.