தனியார் துறையைச் சேர்ந்த கர்நாடகா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 60.7 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி ரூ.140.41 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.87.38 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 60.7 சதவீதம் அதிகம்.
நிகர வட்டி வருமானம் ரூ.451.48 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.487.95 கோடியாக காணப்பட்டது.
மொத்த வாராக் கடன் விகிதம் 3.96 சதவீதத்திலிருந்து அதிகரித்து 4.45 சதவீதமாக இருந்தது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 2.85 சதவீதத்திலிருந்து உயர்ந்து 3 சதவீதமானது என கர்நாடகா வங்கி தெரிவித்துள்ளது.