பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டின் பணவீக்கத்தில் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு, நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் எரிபொருள்கள் மீது வரி விதிப்பை அமல்படுத்தியது. அதன் காரணமாக, மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.40-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.36-ம் உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு பணவீக்கத்தில் மிக குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும். பணவீக்கமானது ஏற்கெனவே 4 சதவீதம் என்ற குறைவான அளவில் கட்டுக்குள் தான் உள்ளது. எனவே, இதுகுறித்து நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.90,000 கோடி அளவுக்கு ஈவுத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.