கடந்த நிதியாண்டில் வர்த்தகத்துக்கு தயாரான உருக்குப் பொருள்களின் இறக்குமதி 78.30 லட்சம் டன்னாக இருந்தது என்று நாடாளுமன்றத்தில் மத்திய உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
வர்த்தகத்துக்கு தயார் நிலையில் உள்ள உருக்குப் பொருள்களின் இறக்குமதி 2017-18 நிதியாண்டில் 74.80 லட்சம் டன்னாக காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2018-19 நிதியாண்டில் அவற்றின் இறக்குமதி 4.7 சதவீதம் அதிகரித்து 78.30 லட்சம் டன்னை எட்டியுள்ளது.
குறிப்பாக, துருப்பிடிக்காத உருக்கு, குளிரூட்டப்பட்ட மற்றும் சூடான உருக்குத் தகடுகள், எலக்ட்ரிக்கல் ஷீட் உள்ளிட்ட பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.