நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.270.52 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் இந்நிறுவனம் ரூ.335.96 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,060.47 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,570.11 கோடியானது.
2018-19 முழு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.604.77 கோடியாகவும், வருவாய் ரூ.25,406.19 கோடியாகவும் இருந்தது.
கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 ஈவுத்தொகை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளதாக செபி-யிடம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தெரிவித்துள்ளது.