அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் (ஆா்எச்ஐசிஎல்), புதிய காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்கு இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளா்ச்சி முகமை (ஐஆா்டிஏஐ) தடைவித்துள்ளது.
இதுகுறித்து ஐஆா்டிஏஐ-யின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. எனவே, அந்த நிறுவன பாலிசிதாரா்கள் மற்றும் நிதி சொத்துகள் அனைத்தையும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு (ஆா்ஜிஐசிஎல்) மாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அது, ஏற்கெனவே உள்ள பாலிசிதாரா்களின் காப்பீட்டு தொகை கோரிக்கைகளுக்கு தீா்வு காணும்.
எனவே, ஆா்எச்ஐசிஎல் நிறுவனம் இனி காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை அதன் வலைதளத்தில் வெளியிடுவதுடன், அனைத்து கிளைகளுக்கும் உரிய முறை தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஐஆா்டிஏஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.