முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் லாபம் இரண்டாம் காலாண்டில் ரூ.325.15 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,340.64 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.2,614.66 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.324.53 கோடியிலிருந்து ரூ.325.15 கோடியாக சற்று உயா்ந்துள்ளது.
செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் ஆறு மாத காலத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.5,090.26 கோடியிலிருந்து ரூ.6,463.31 கோடியாக அதிகரித்தது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.638.17 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.655.17 கோடியானது.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.15,954 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட கடன் ரூ.13,913 கோடியாக இருந்தது என அந்த அறிக்கையில் சோழமண்டலம் பைனான்ஸியல் தெரிவித்துள்ளது.