தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.21.58 கோடியை ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ரூ.783.89 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதி ஆண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.1,014.07 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
அதேசமயம், வரிக்கு முந்தைய லாபம் ரூ.10.15 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.33.42 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.6.52 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.21.58 கோடியாகவும் இருந்தன.
செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,744.52 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.1,949.31 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவான அளவாகும்.
அதேசமயம், வரிக்கு முந்தைய லாபம் ரூ.48.99 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.147.70 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.31.21 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.98.67 கோடியாகவும் இருந்தன.
நடப்பாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் காகித உற்பத்தி 1,08,752 டன்னாகவும், காகித அட்டையின் உற்பத்தி 42,516 டன்னாகவும் இருந்தது என டிஎன்பிஎல் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.