இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடன் கடந்த ஜூலை மாதத்தில் இருமடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்தாண்டு ஜூலையில் இந்திய நிறுவனங்கள் 218 கோடி டாலர் மதிப்பிலான கடன்களை திரட்டியிருந்தன. நடப்பாண்டு ஜூலையில் இது இருமடங்கு அதிகரித்து 498 கோடி டாலரை எட்டியுள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள் திரட்டிய மொத்த கடனில், 337 கோடி டாலர் மதிப்பிலான கடன் முன் அனுமதி தேவைப்படாத ஆட்டோமேட்டிக் வழிமுறையிலும், 156 கோடி டாலர் மதிப்பிலான கடன் அனுமதியுடன் பெறக்கூடிய அப்ரூவல் வழிமுறையிலும் திரட்டப்பட்டுள்ளன. எஞ்சிய 5 கோடி டாலர் மதிப்பிலான கடன் மசாலா பாண்டு அல்லது ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட கடன்பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.