பெரு நிறுவன வரி குறைப்பின் எதிரொலியால் கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் பங்குச் சந்தைகள் வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தைக் கண்டன. இந்த இரண்டு நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 8.30 சதவீத (2,996 புள்ளிகள்) ஏற்றத்தைக் கண்டது. முன்னணி 50 பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 8.36 சதவீதம் (895 புள்ளிகள்) உயர்ந்தது. இதன் காரணமாக, பங்குகளின் சந்தை மதிப்பு இந்த இரு தினங்களில் மட்டும் ரூ.10,35,213 கோடி அதிகரித்து ரூ.1,48,89,652 கோடியைத் தொட்டுள்ளது.