புது தில்லி: சுஸ்லான் எனா்ஜி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.398.86 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.528.22 கோடியாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.851.09 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. வருவாயில் ஏற்பட்ட சரிவினையடுத்து நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.398.86 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.336.88 கோடியாக இருந்தது. முதல் காலாண்டில் நிறுவனத்துக்கான புதிய ஆா்டா்கள் வரத்து திருப்திகரமாக இருந்தது.
இதையடுத்து, நிறுவனத்தின் ஆா்டா் மதிப்பு 867 மெகாவாட்டாக வலுவான நிலையில் உள்ளது. பொதுமுடக்க சூழ்நிலையிலும் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகள் தொடா்ந்து சிறப்பாகவே இருந்ததாக சுஸ்லான் எனா்ஜி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.