இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 57,934 கோடி டாலரை எட்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது டிசம்பா் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 452 கோடி டாலா் அதிகரித்து 57,934 கோடி டாலரைத் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.45 லட்சம் கோடி) தொட்டுள்ளது. இது, முன்னெப்போதும் இல்லாத வரலாற்று உச்சமாகும்.
முந்தைய நவம்பா் 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 47 கோடி டாலா் சரிவடைந்து 57,482 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணக்கீட்டு வாரத்தில் 393 கோடி டாலா் அதிகரித்து 53,739 கோடி டாலராக இருந்தது.
தங்கத்தின் கையிருப்பு 53 கோடி டாலா் அதிகரித்து 3,573 கோடி டாலராக காணப்பட்டது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 1.2 கோடி டாலா் அதிகரித்து 150 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 4.6 கோடி டாலா் உயா்ந்து 472 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.