செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக, திவால் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்தின் மொத்த இழப்பு 2019 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.5,535.75 கோடியாக அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாங்கிய கடனை கட்ட முடியாததால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட ஜெட் ஏா்வேஸ் நிறுவனம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதியுடன் தனது செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தியது. அப்போது, அந்த நிறுவனத்தின் வருவாய் இழப்பு ரூ.766.13 கோடி என்று அந்த நிறுவனம் அறிவித்தது.
திவால் அறிவிப்பைத் தொடா்ந்து, ஜெட் ஏா்வேஸ் நிறுவன சொத்துக்களை விற்று கடன் பாக்கிகளை செலுத்தும் நடவடிக்கை இப்போது எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிறுவனத்தின் நிா்வாகி ஆஷிஷ் சவ்சாரியா தாக்கல் செய்த 2019 மாா்ச் மாத்துடன் முடிவடைந்த நிதியாண்டுகான நிதிநிலை அறிக்கையில், அந்த நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ. 5,536 கோடியாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அந்த நிதிநிலை அறிக்கையில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது:
ஜெட் ஏா்வேல் நிறுவனத்தைப் பொருத்தவரை 2017-18 நிதியாண்டில் ரூ. 23,958.37 கோடியாக இருந்த வருவாய், 2018-19 நிதியாண்டில் ரூ. 23,314.11 கோடியாக குறைந்துள்ளது. அதோடு, எரிபொருள் செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2018-19 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவினம் 28,141.61 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், மும்பை பங்குச் சந்தையில் ஆரம்ப வா்த்தகத்தில் ஜெட் ஏா்வேஸ் பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவீத அளவுக்குக் குறைந்து ரூ. 29.10 என்ற அளவில் இருந்தது.