மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 4,000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் பிற்பகல் 3.20 மணியளவில் சென்செக்ஸ் 4,000 வீழ்ச்சியடைந்து 25,929.69 புள்ளிகளில் வர்த்தகமானது. இது முந்தைய வர்த்தகத்தைக் காட்டிலும் 13.32 சதவீதம் வீழ்ச்சியாகும்.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 1,157.55 புள்ளிகள் சரிவடைந்து 7,587.90 புள்ளிகளில் வர்த்தகமானது.