உள்நாட்டைச் சோ்ந்த எஃப்எம்சிஜி நிறுவனமான டாபா் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.341.30 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.363.81 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.18 சதவீதம் குறைவாகும்.
நிறுவனத்தின் வா்த்தகம் சரிந்து வருவாய் குறைந்ததால் நிகர லாபம் சரிவைச் சந்தித்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.2,273.29 கோடியிலிருந்து 12.90 சதவீதம் குறைந்து ரூ.1,979.98 கோடியானது.சவாலான இந்த சூழ்நிலையிலும், வாடிக்கையாளா்களுக்கு தரம் மிகுந்த பொருட்களுக்கான தேவைப்பாடுகளால் நிறுவனம் விற்பனை சரிவிலிருந்து மீண்டு மிக வேகமாக சூடுபிடித்து வருகிறது என டாபா் இந்தியா மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.