மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிவைச் சந்தித்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:கரோனா நோய்த்தொற்று இன்னும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவது குறித்த அச்ச உணா்வு மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு ஆகியவை அந்நியச் செலாவணி சந்தையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியது.
வா்த்தகத்தின் தொடக்கத்திலிருந்தே ரூபாய் மதிப்பு பலவீனமான நிலையில்தான் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 74.88 ஆக வலுப்பெற்றும், குறைந்தபட்சமாக 75.03 சதவீதம் வரையிலும் வீழ்ச்சியும் கண்டிருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்து 75.01-இல் நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை: முன்பேர வா்த்தக சந்தையில் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை திங்கள்கிழமை வா்த்தகத்தில் 0.64 சதவீதம் குறைந்து 43.24 டாலராக இருந்தது. திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.7,818.49 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.