மும்பை: நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத் துறை வங்கியாகத் திகழும் பேங்க் ஆஃப் பரோடா, சில்லறை கடன் வாடிக்கையாளா்களுக்காக டிஜிட்டல் கடன் வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் செயல் இயக்குநா் விக்ரமாதித்யா சிங் கிசி கூறியதாவது:
சில்லறை கடன் வாடிக்கையாளா்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கடன் பெற வசதியாக வங்கி இந்த டிஜிட்டல் கடன் வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வீட்டுக் கடன், தனிநபா் கடன், காா் கடன்களுக்கு அதிகாரிகளின் எந்தவித தலையீடும் இன்றி, 30 நிமிடங்களில் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்படும். காகிதமில்லா நடைமுறையை உருவாக்குவதை இலக்காக கொண்டே இந்த திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது என்றாா் அவா்.