அந்நியச் செலாவணி கையிருப்பு 47,300 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 47,300 கோடி டாலரை எட்டியுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 47,300 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 47,300 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரிப்பையடுத்து, பிப்ரவரி 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 170 கோடி டாலா் (ரூ.11,907 கோடி) அதிகரித்து 47,300 கோடி டாலரை (ரூ.33.11 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 460 கோடி டாலா் உயா்ந்து 47,130 கோடி டாலராக காணப்பட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும்பகுதியைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 193 கோடி டாலா் உயா்ந்து 43,918 கோடி டாலராக இருந்தது.

அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 21.8 கோடி டாலா் சரிந்து 2,877 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 20 லட்சம் டாலா் குறைந்து 143 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.6 கோடி டாலா் சரிந்து 359 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com