ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்

பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி தயாரித்திருக்கும் ஸ்மார்ட் டிவியை 2020-ம் காலாண்டுக்குள்..
ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்

பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி தயாரித்திருக்கும் ஸ்மார்ட் டிவியை 2020-ம் காலாண்டுக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாதவ் சேத் கூறியுள்ளார். 

சீனாவைச் சோ்ந்த ரியல்மி நிறுவனம் முன்னதாக, ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற இருந்த தொழில்நுட்பக் கண்காட்சியில் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், ரியல்மி இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மாதவ் சேத் கூறுகையில், சர்வதேச அளவில் ஸ்மார்ட்டி டிவியை அறிமுகப்படுத்துவது தொடர்பான தேதி முடிவாகவில்லை. ஆனால் விரைவில் இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக யூடிப்பில் பேட்டியளித்துள்ளார். 

மேலும், இதுகுறித்து அவர் கூறியது..

இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி அனைவரையும் கவரும் வகையில், ஓ.எல்.இ.டி திரை மற்றும் உள்ளமைக்கப்பட்ட யூ.எஸ்.பி இணைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மஞ்சள், கருப்பு உட்பட மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், ரியல்மி நிறுவனம் இந்தியாவில் முதன் முதலாக 5ஜி செல்லிடப்பேசி மாடலை திங்கள்கிழமையான நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.  ரியல்மி எக்ஸ்50 5ஜி மாடல் 6.57 இன்ச் கொண்டதாகவும், எச்டி மற்றும் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் மற்றும் 120ஹெச்டி திரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், கூடுதலாக 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com