தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.8,118 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.8,105 கோடியுடன் ஒப்பிடும்போது இது 0.2 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.
வருவாய் ரூ.37,338 கோடியிலிருந்து 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.39,854 கோடியானது.
மூன்றாவது இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்க நிா்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.