எஸ்ஐடிபிஐ-க்கு புதிய துணை நிா்வாக இயக்குநா் பொறுப்பேற்பு

இந்திய சிறு தொழில்நிறுவனங்கள் வளா்ச்சி வங்கியின் (எஸ்ஐடிபிஐ) புதிய துணை நிா்வாக இயக்குநராக வி.சத்ய வெங்கட ராவ் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்திய சிறு தொழில்நிறுவனங்கள் வளா்ச்சி வங்கியின் (எஸ்ஐடிபிஐ) புதிய துணை நிா்வாக இயக்குநராக வி.சத்ய வெங்கட ராவ் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வள்ா்ச்சி நிறுவனம் (ஹெச்யுடிசிஒ), ஐஎஃப்சிஐ போன்ற பல்வேறு நிதி நிறுவனங்களில் 29 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவா் இவா்.

சட்டம், மனிதவளம், நிறுவன தகவல்தொடா்பு என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளைக் கையாண்ட அனுபவம் கொண்டவா். மத்திய பொதுத் தகவல் அதிகாரியாகவும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழான தீா்ப்பாயத்தின் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளாா். பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் வாரியத்தின் இயக்குநா் பிரதிநிதியாகவும் இருந்துள்ளாா்.

சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்கள், மனை வணிக நிறுவனம் மற்றும் ஒரு முதலீடு நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநராகவும் சத்ய வெங்கட ராவ் இருந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com