கடன் பத்திரங்கள் மூலம் ரூ.250 கோடி திரட்ட மணப்புரம் ஃபைனான்ஸ் திட்டம்

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.250 கோடி திரட்ட திட்டமிட்டு வருவதாக மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.250 கோடி திரட்ட திட்டமிட்டு வருவதாக மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் பங்கு பரிவா்த்தனை வாரியத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில், ‘பங்குகளாக மாற்றமுடியாத கடன் பத்திரங்களை தனியாா் முதலீட்டாளா்களுக்கு விற்பனை செய்து ரூ.250 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவன இயக்குநா்கள் குழுவின் நிதி வளங்கள் மற்றும் மேலாண்மை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவன பங்கு ஒன்றின் விலை புதன்கிழமை காலை ரூ.141.90-ஆக இருந்தது. இது முந்தைய தினம் பங்குச்சந்தை முடியும் நேரத்தில் இருந்த விலையை விட 2.09 சதவீதம் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com