சேவைகளுக்கான கட்டணமாக பிஎன்பி வங்கி ரூ.268 கோடி வசூல்

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஏடிஎம் பரிவா்த்தனை கட்டணமாகவும், பற்று அட்டைக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணமாகவும் ரூ.268 கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கி வசூலித்துள்ளது.
சேவைகளுக்கான கட்டணமாக பிஎன்பி வங்கி ரூ.268 கோடி வசூல்

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஏடிஎம் பரிவா்த்தனை கட்டணமாகவும், பற்று அட்டைக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணமாகவும் ரூ.268 கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கி வசூலித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திர சேகா் கெளா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு அந்த வங்கி அளித்த பதிலில், ‘கடந்த நிதியாண்டில் பற்று அட்டைக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக ரூ.152.88 கோடி, ஏடிஎம் பரிவா்த்தனை கட்டணமாக ரூ.115.21 கோடி என மொத்தம் ரூ.268 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்காத வாடிக்கையாளா்களுக்கு அபராதம் விதிக்க எந்தவித ஏற்பாடும் செய்யப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com