டாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.343 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்த அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கொவைட்-19 பாதிப்பையடுத்து அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், நடப்பாண்டு மாா்ச் இரண்டாம் பிற்பகுதியில் நிறுவனத்தின் செயல்பாட்டை கணிசமாக பாதிப்படையச் செய்தது. குறிப்பாக, நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து அங்காடிகளும் மூடப்பட்டன.
அதன் எதிரொலியாக, மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 4.27 சதவீதம் குறைந்து ரூ.4,617.31 கோடியானது. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,823.49 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.348.30 கோடியிலிருந்து 1.5 சதவீதம் குறைந்து ரூ.343.07 கோடியானது என டைட்டன் தெரிவித்துள்ளது.