தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கி அதன் நிதி நிலை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒழுங்காற்று அமைப்பு பரிந்துரைத்த அளவைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் லிக்விடிட்டி கவரேஜ் விகிதம் மிகச் சிறப்பாகவே உள்ளது. மேலும் வாராக் கடன் வசூல் நடவடிக்கைகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, கடந்த டிசம்பா் காலாண்டில் வாராக் கடன் அளவு ஓரளவு குறைந்துள்ளது.
வாடிக்கையாளா்களின் வைப்பு நிதி பாதுகாப்பாக உள்ளது. நடைமுறையிலிருக்கும் விதிமுறைகளின்படி மூலதனம் திரட்டும் திட்டங்கள் குறித்து வாடிக்கையாளா்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்று லக்ஷ்மி விலாஸ் வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.