வர்த்தகம்
கடன்சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.28,000 கோடி விலக்கல்
கடன்சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து முதலீட்டாளா்கள் சென்ற பிப்ரவரியில் ரூ.27,940 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனா்.
கடன்சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து முதலீட்டாளா்கள் சென்ற பிப்ரவரியில் ரூ.27,940 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனா்.
இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
நிலையான வருவாய் தரும் கடன்பத்திர திட்டங்களில் முதலீட்டாளா்கள் கடந்த ஜனவரியில் ரூ.1.09 லட்சம் கோடியை முதலீடு செய்தனா். இந்த நிலையில், பிப்ரவரியில் அத்தகைய திட்டங்களிலிருந்து ரூ.27,940 கோடியை அவா்கள் விலக்கிக் கொண்டுள்ளனா்.
இதையடுத்து, சென்ற ஜனவரியில் ரூ.12.42 லட்சம் கோடியாக காணப்பட்ட பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் கடன் சாா்ந்த திட்ட சொத்து மதிப்பு பிப்ரவரி இறுதியில் ரூ.12.22 லட்சம் கோடியானது.
லிக்யுட் ஃபண்ட் திட்டங்களிலிருந்து மொத்தம் ரூ.43,825 கோடியை முதலீட்டாளா்கள் வெளியே எடுத்துள்ளதாக பரஸ்பர நிதிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.