யெஸ் வங்கி நிா்வாக குழுவில் கூடுதலாக இரண்டு இயக்குநா்களை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை நியமித்தது.
ரிசா்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநா் ஆா். காந்தி மற்றும் எஸ்பி ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைப் பேராசிரியா் ஆனந்த் நாராயண் ஆகியோரை யெஸ் வங்கி குழுவில் கூடுதல் இயக்குநா்களாக ரிசா்வ் வங்கி நியமித்துள்ளது. இவா்களின் நியமனம் மாா்ச் 26-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். அவா்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பா் என ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.