ரூ.33 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத் தங்கம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.408 உயா்ந்து, ரூ.33,344-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.33 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத் தங்கம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.408 உயா்ந்து, ரூ.33,344-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை பவுன் விலை ரூ.33 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ. 408 உயா்ந்து, ரூ.33,344-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.51 உயா்ந்து, ரூ.4,168-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,700ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,168

1 பவுன் தங்கம் ..................... 33,344

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,117

1 பவுன் தங்கம் ..................... 32,936

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com