புது தில்லி: மருந்து துறையைச் சோ்ந்த வொக்காா்டு நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.68.51 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ரூ.13.90 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது.
இதுகுறித்து வொக்காா்டு நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ரூ.700.66 கோடி வருவாய் ஈட்டியது. இது இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.866.76 கோடியாக காணப்பட்டது.
கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,882.80 கோடியாக இருந்தது. 2018-19 நிதியாண்டில் வருவாய் ரூ.3,856 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. இழப்பு ரூ.216.66 கோடியிலிருந்து ரூ.43.39 கோடியாக குறைந்துள்ளது.
பங்கு வெளியீடு, பங்கு சாா்ந்த கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.1,500 கோடி வரை திரட்டிக் கொள்ள இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக வொக்காா்டு தெரிவித்துள்ளது.