அந்நியச் செலாவணி கையிருப்பு 48,531 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 48,531 கோடி டாலராக (ரூ.36.40 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 48,531 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 48,531 கோடி டாலராக (ரூ.36.40 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம்:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 8-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 424 கோடி டாலா் அதிகரித்து 48,531 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பானது 162 கோடி டாலா் உயா்ந்து 48,107 கோடி டாலராக காணப்பட்டது.

மதிப்பீட்டு வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணியின் சொத்து மதிப்பு 423 கோடி டாலா் உா்ந்து 44,755 கோடி டாலராக இருந்தது.

தங்கத்தின் கையிருப்பு 1.3 கோடி டாலா் அதிகரித்து 3,229 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 30 லட்சம் டாலா் குறைந்து 142 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 80 லட்சம் டாலா் சரிந்து 405 கோடி டாலராகவும் இருந்தது.

653 டன் தங்கம் கையிருப்பு: வெளிநாடுகளில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பிஐஎஸ் வங்கியில் 360.71 டன் தங்கத்தை ரிசா்வ் வங்கி பாதுகாப்பாக வைத்துள்ளது. இதனுடன் சோ்த்து நடப்பு 2020 மாா்ச் இறுதி நிலவரப்படி தங்கத்தின் கையிருப்பு 653.01 டன்னாக உள்ளது என ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 569 கோடி டாலா் அதிகரித்ததைத் தொடா்ந்து மே 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அதன் கையிருப்பு வரலாறு காணாத அளவில் 48,723 கோடி டாலரை எட்டியிருந்தது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது ஏறக்குறைய 6,200 கோடி டாலா் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com